articles

img

செயற்கை இரத்த குழாய்கள்

    கலிஃபோர்னியா விலுள்ள பல்கலைக்கழகத்தில் குவின்டன் ஸ்மித் எனும் வேதியியல் பொறியாளர் சோதனைசாலையில் உடல் உறுப்புகளை உருவாக்குகிறார்.

     இது உயிர்களின் நிஜ உறுப்புகளை அப்படியே பிரதி எடுத்தது போல் செயல்படுகிறதாம். நோய்களையும் அவற்றிற்கான சிகிச்சைகளையும் புதிய முறையில் ஆய்வு செய்வதற்கு இது பயன்படும்.மின்னணு தொழில் நுணுக்கங்களையும் ஸ்டெம் செல் உயிரியல் துறையையும் இணைக்கும் இந்த முறை இதற்கு முன் கையாளப்படவில்லை என்கிறார் ஸ்மித். அவர் வடிவமைத்த கருவியில் சிலிக்கான் தட்டுகளில் உள்ள அறைகளில் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆக்சிஜனும் திரவங்களும் சுற்றுகின்றன. இது நமது இரத்த குழாய்கள் உருவாகும் சூழலாகும்.

    நமது உடலில் ஸ்டெம் செல்கள் பலவகை உறுப்புகளை உருவாக்குக்கின்றன. ஸ்மித்தின் ஆய்வில் ஸ்டெம் செல்களை இரத்த குழாய்களாக உருவாக்க முயற்சித்தார்.கண்ணாடி தட்டுகளில் புரதங்களை பதித்து அதன் மேல் செல்களை இணைத்து அவை ஆரம்ப கட்ட செயற்கை இரத்த குழாய்களாக வளருவதற்கு தூண்டினார். இது மைக்ரோபேடர்னிங் எனப்படுகிறது. வகைப்பாடை  பொறுத்து செல்கள் இரு பரிமாண நட்சத்திர வடிவம், வட்ட வடிவம் அல்லது முக்கோணமாக  உருவானது. செல்கள் ஒன்றிணைந்து எவ்வாறு குழாய்களாக மாறுகின்றன என்பதை இதன் மூலம் காட்டினார். இதேபோல் பித்தகுழாய்களையும் உருவாக்க முடியும்.

    உயிரியல் மற்றும் பொறியியல் அறிவை ஒருங்கே கொண்டிருப்பதால் ஸ்மிதினால் இந்த அணுகுமுறையை கையாள முடிந்தது. இப்போது ஸ்மித்தின் சோதனை சாலையில் 3டி அச்சு முறையை பயன்படுத்தி ஈரல் திசுக்கள், இரத்த குழாய்கள் மற்றும் பித்தக் குழாய்கள் சரியான முறையில் வளருவதை உறுதி செய்கிறார்கள். ஆரோக்கியமானவர்களிடமிருந்து வளர்க்கப்பட்ட உறுப்புகளை ஈரல் வீக்கம் போன்ற நோய் உள்ளவர்களிடமிருந்து வளர்க்கப்பட்டவற்றோடு ஒப்பிட்டு நோயின் காரணத்தை அறியலாம்.